`டாக்டர்கள், மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பை பொறுத்துக்கொள்ள முடியாது’ -மும்பை ஹைகோர்ட்
மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக 50-க்கும் அதிமானோர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 20-க்கும் அதிமானோர் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகள். இது குறித்து வழக்கறிஞர் மொகித் கண்ணா மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார். அக்கடிதத்தை மனுவாக ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் தேவேந்திர குமார் மற்றும் ஆரிப்…









