Monthly Archives: August, 2023

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சாகலாம்… உண்மை சம்பவமும் மருத்துவர் விளக்கமும்!

சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது தாகத்தைத் தணிக்க, 20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தியுள்ளார்; அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தண்ணீர் எப்படி உயிரைப் பறிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய நிலையை ஹைப்போனட்ரெமியா (Hyponatremia) என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம், இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…மருத்துவர்…

பனீர் வைத்து ஒரு முறை இந்த மாதிரி அல்வா ட்ரை பண்ணி பாருங்க… அப்பறம் டெய்லி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க..!

இனிப்பு வகைகளில் பலருக்கும் ஃபேவரட்டான ஸ்வீட் என்றால் அது அல்வா தான். அல்வாவை பார்த்தவுடனே கட்டாயமாக நமக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு விசேஷங்களுக்கு கட்டாயமாக பெரும்பாலான வீடுகளில் அல்வா இல்லாமல் இருக்காது. அல்வாவில் பல வகைகள் உண்டு. பாம்பே அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, அசோகா அல்வா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான பன்னீர் அல்வா…

Doctor Vikatan: முகத்தில் கரும்புள்ளி, உடலெங்கும் அரிப்பு… தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகள் வருகின்றன. உடல் முழுவதும் அரிப்பும் இருக்கிறது. நீரிழிவுநோயும் இல்லை. இது என்ன பிரச்னை…. இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாகேள்வியில் உங்கள் வயது, உங்கள் வேலையின் தன்மை, தினமும் சூரிய வெளிச்சத்தில் செலவிடும் நேரம், வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான அறிகுறிகளை வைத்து இதற்கான…

இயற்கை தரும் பேரழகு !

பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும் அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே…இயற்கை தரும் பேரழகு !1 கிருமிநாசினியாகும் வேப்பிலைஅழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். இது…

சுதந்திர தினத்தில் பனீர் வைத்து இந்த ஸ்பெஷல் ரெசிபி செய்து பாருங்க

ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய…

தாய்மையே அழகு!

‘தாய்ப்பால்’ மனிதர் உணரும் முதல் பசியின் உணவு. முதல் ருசியும் அதுதான். குழந்தை முதன்முதலில் தனக்கான ஒரு உறவைத் தேடி, உறுதி செய்வது தாய்ப்பாலை அருந்தும் போதுதான். பாதுகாப்பான உணர்வு, அரவணைப்பு, அன்பு, கருணை போன்ற பண்புகளையும், தாயின் கதகதப்பிலிருந்து குழந்தை உணரத் தொடங்கும். இயற்கையின் படைப்பாகச் சுரக்கும் தாய்ப்பாலில் சத்துக்களோடு, அன்பும் கலந்து ஊட்டப்படுகிறது. முதன்முறையாக ஒரு தாய் தன்னை முழுமையாக உணரும் தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தை பசியாறும் நிமிடம்தான். குழந்தை…

How To: நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி? | How to diagnose the symptoms of diabetes?

சர்க்கரை நோய் என நாம் அழைக்கும் நீரிழிவு நோயை, முந்தைய காலத்தில் பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஏனென்றால் பெரிய அளவில் உடல் உழைப்பில்லாத, வசதி படைத்தவர்கள்தான் அதிகளவில் நீரிழிவுக்கு ஆட்பட்டதால் அப்படியாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை முற்றிலுமாக மாறி வயது வேறுபாடு, வர்க்க வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நீரிழிவுக்கு ஆளாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற தாரக மந்திரம் அனைத்து நோய்களுக்கும் பொருந்தக்கூடியது. எந்த நோயாக இருந்தாலும் முடிந்தவரை…

சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை.. அற்புதம் செய்யும் பீட்ரூட் நன்மைகள்.!

இரத்த விருத்தி காய் என அழைக்கப்படும் பீட்ரூட்டில் பல விதமான சத்துக்களைக் கொண்டது. பீட்ரூட்டில் வைட்டமின் பி9 நிறைந்த, மாங்கனீஸ், பொட்டாசியம், அயன், வைட்டமின் சி என்று எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் உள்ள சத்துக்கள் நமது உடலில் எந்தெந்த வகையில் நன்மைகள் செர்க்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

Doctor Vikatan: மெதுவாக நடந்தாலும் முதியோர் அதிகம் சறுக்கி விழுவது ஏன்?

Doctor Vikatan: ஈரமான தரைகள் மற்றும் பாத்ரூம்களில் எல்லோரும் புழங்கினாலும் மெதுவாக நடக்கும் வயதானவர்களுக்கு அதிகம் சறுக்கி விடுவது ஏன்?Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்ஈரம் எங்கிருந்தாலும் அந்தப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அது படிகிற இடங்களில் மென்மையான படலம் ஏற்பட்டு, கால்களை ஊன்றும்போது பிடிமானம் இல்லாமல் வழுக்கிவிடும். அதனால்தான் குளியலறை, கழிவறை போன்றவற்றை உபயோகித்து முடித்ததும் ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திருக்கப் பழக வேண்டும் என்பது…

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.’தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் கடமை.தாய்ப்பாலே தடுப்பூசிதான்!சீம்பால் (Colostrum) மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும்…

1 10 11 12 13 14 18