புதுக்கோட்டை: காதல் திருமணம்; `கணவரின் உயிருக்கு ஆபத்து' – எஸ்.பி-யிடம் புகாரளித்த மனைவி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார். இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்திருக்கின்றனர். சிவானந்தம் பி.சி.ஏ படித்துவிட்டு லோடு மேனாக வேலை பார்த்துவருகிறார். கணவர் சிவானந்தத்துடன் வந்த சரிதாஇவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சரிதாவுக்கு அவரின் குடும்பத்தினர் வேறு…







