ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ கொடுத்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு…









