Daily Archives: February 27, 2023

கத்தார் ஓபன் டென்னிஸ் : ஆண்டி முரேவை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றார் மெட்வடேவ்

முதல் செட்டில் 4-1 என்ற கணக்கிலும், 2ஆவது செட்டில் 3-1 என்ற கணக்கிலும் மெட்வடேவ் அதிகவேகமாக புள்ளிகளை குவித்திருந்தார். நன்றி

மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி…

தென்னாப்பிரிக்க அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 157 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.  தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலீசா ஹீலி மற்றும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்… காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள  செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். * ஈரோடு…

மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: காணொலியில் பங்கேற்ற வாசிம் அக்ரம் வலியுறுத்தல் | India Pakistan cricket match again Wasim Akram insists on the video

சென்னை: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் ‘லிட் ஃபார் லைஃப்’நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு…

முடி வேகமாக வளரனுமா..? இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கோங்க…

இறைச்சிகள், கோழி, மீன், முட்டை, பால் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.  இந்த உணவுகள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும். முக்கியமாக, நீங்கள் உயர் புரதச்சத்து உணவு முறையை கடைப்பிடித்தால் போலேட், சல்பர், துத்தநாகம், வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B12 ஆகியவை முடி உதிர்வை குறைத்து நன்றாக வளர வைக்கும். எனவே தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான இந்த சூப்பர் உணவுகளை பற்றி…

பிப் 27: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

வலிமையான யாரையும் எதிர்க்க மாட்டோம், பலவீனமானவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்பது கோழைத்தனம். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅமெரிக்காவை வெறுக்கும் பாகிஸ்தான், சீனா, ஈராக் போன்ற நாடுகளுக்கான நிதி உதவி அடியோடு நிறுத்தப்படும். :- அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலேசிறையில் சில காலம் இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. நான் பகத் சிங்கின் சீடன். :- ெடல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சூரியன், சந்திரன் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் பாஜ…

டெஸ்டில் அதிக சிக்சர்கள்… தோனி, சச்சின் சாதனைகளை முறியடித்த நியூசிலாந்து பவுலர்

டெஸ்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களில், தோனி, சச்சின் சாதனைகளை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுத்தீ முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டிம் சவுத்தீ. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தற்போது 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.முதல் இன்னிங்ஸின் 2ஆவது நாள்…

துபாய்க்குச் சென்ற காரைக்கால் பெண் நடனக் கலைஞர் இறப்பு – மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார் | karaikal woman dancer died in dubai her parents alleging mysterious death

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவருக்கு என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அவர், அங்கேயே தங்கி விடுதியில்…

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாற்காலிக்கு சிக்கல்?: சட்டசபை தேர்தலால் பாஜக தலைமை திடீர் முடிவு

போபால்: இந்தாண்டு இறுதியில் மத்தியபிரதேச தேர்தல் வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. பாஜகவை விட அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ்  கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி  அமைத்தது. ஆனால், பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகளால், ஜோதிராதித்ய  சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர்…