தேனி: குடும்பத் தகராறு: மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி! – இரு குழந்தைகள் பலியான சோகம் | husband and wife attempts suicide along with their children by falling into the well in theni
தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட கிணற்றுப்…


