Daily Archives: January 4, 2023

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 | jaundice attacks children – infant care 2

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது?பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம்.குழந்தையை இயற்கை…

ரிஷப் பந்த்துக்கு மும்பையில் சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்பு | rishabh pant to undergo treatment in mumbai private hospital bcci health update

மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் டேராடூனில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலமாக மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில்…

சியாச்சினில் சிங்கப்பெண்: உலகின் உயரமான போர்களத்தின் முதல் பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சவுகான்! | Shiva chauhan deployed indian army’s first female officer at siachen

உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார். இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக…

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடாததால் தேர்தல் ஆணையத்தின் 2வது கடிதத்தையும் எடப்பாடி அணியினர் திருப்பி அனுப்பினர்: டெல்லிக்கு இமெயிலில் தகவல் அனுப்பினார் தேர்தல் அதிகாரி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர். இதனால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எடப்பாடி அணியினர் கையில் உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அவரும்…

உயிரை பறிக்குமா இருமல் டானிக்… குழந்தைகள் நலனில் அலட்சியம் ஆபத்தானது என எச்சரிக்கும் மருத்துவர்! | Cough syrup deaths – doctor’s explain

இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸி. நிதான தொடக்கம்… முதல் நாள் ஆட்டம் நிறைவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 47 ஓவர்களுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.குறிப்பாக முதல் டெஸ்ட்…

ஒரு நாளைக்கு இத்தனை முட்டைதான் சாப்பிடனுமா..? அதிகமானால் என்ன ஆகும்..?

நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர். நன்றி

உலகின் உயரமான மனிதன் – தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல்

கட்டுரை தகவல்உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது.”அளக்க டேப் இல்லை”வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்தார் 29 வயதான சுலைமானா அப்துல் சமத். ஆனால் இவரை இந்த வட்டாரத்தில்…

40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா?.. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை..!

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி அண்ணாமலை குறித்து விசாரிக்க வலியுறுத்துவேன் என்றும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர்…

தூக்கத்தில் பேசும் பழக்கம்… என்ன காரணம்; கட்டுப்படுத்த வழி உண்டா? மருத்துவ விளக்கம் | Habit of talking in sleep – reason and solution

பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம். எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும்…