பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுவை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்!!
புதுச்சேரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று…









