எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
சென்னை; பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை, உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சத்திக்க, தமிழகத்தின்…









