எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்க ரூ.100 கோடியில் அதிரடி திட்டம்: ஓபிஎஸ் – சசிகலா ரகசிய ஒப்பந்தம்
சென்னை: அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தையும், அதிமுகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ‘ஒற்றைத் தலைமையின் கீழ்…