கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு: கனிமொழி எம்.பி. பேட்டி
சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை அடையாறில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பாஜ ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில்…









