திண்டிவனம்: "டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா?" – திரைப்பட பாணியில் காரை திருடிய நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மாருதி சுசுகி ஈகோ காரை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவருடைய தந்தையின் மருத்துவச் செலவுக்காக பணத்தேவை இருந்ததால் அந்த காரை விற்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனவே, ஓ.எல்.எக்ஸ் மற்றும் முகநூல் வாயிலாக விளம்பரம் செய்திருக்கிறார் அமிர்தலிங்கம். இதனைப் பார்த்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவர், தன்னுடைய பெயர் ராஜா என்றும், தான் சென்னையைச் சேர்ந்தவன் என்றும், திண்டிவனம்…









