Daily Archives: December 19, 2022

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை

மறைத்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்பழகன் படத்திற்கு மரியாதையை செலுத்தினார். மறைந்த அன்பழகன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் பிறந்துள்ளார். இவர் இயற் பெயர் ஆனது ராமய்யா, திராவிட சிந்தனைகளில்…

Doctor Vikatan: பரம்பரையாகத் தொடருமா மறதி பாதிப்பு? – Doctor Vikatan: Is amnesia hereditary?

நினைவாற்றல் என்பது உள்வாங்குவது, ஸ்டோர் செய்வது, திரும்ப நினைவுபடுத்துவது என மூன்று நிலைகளைக் கொண்டது. இதைத்தான் ரெஜிஸட்ரேஷன், ரிட்டென்ஷன் மற்றும் ரீகால் என்கிறோம். பதற்றத்தில் இருக்கும்போது நம் கவனம் சிதறும். உதாரணத்துக்கு ஒருவர் பதற்றத்தில் இருந்தால் ஒரு பொருளை எங்கே வைக்கிறார் என்று கவனித்திருக்க வாய்ப்பில்லை. பதற்றத்தில் இருக்கும்போது ஒரு விஷயம் மனதில் பதிவதில்லை. இது பலரும் சந்திக்கும் சாதாரண விஷயம்தான்.அதுவே எப்போதும் எல்லா விஷயங்களிலும் மறதி, நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் என உணர்பவர்கள்தான் அது குறித்துக்…

உலகக் கோப்பை சர்ச்சை.. ஜெர்ஸியை மறைக்கலாமா? கத்தாரின் வழக்கத்தால் சிக்கலில் மாட்டிய மெஸ்ஸி!

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது . ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு…

ஒரு வினாடிக்கு 2 பேர் பிரியாணி ஆர்டர்

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளின் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் அனைத்தும் ஆன்லைன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி உணவு விற்பனையில் தொடங்கி டெலிவரி வரைக்குமே நம்மால் ஆன்லைனில் செய்துக்கொள்ள முடியும். முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரியாணி முதல் இடம் பிடித்துள்ளது.ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆன்லைனில்…

2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு

அயர்லாந்து: 2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார். 149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார். Source link

பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ பயணித்த அமித் ஷா – மம்தா பானர்ஜி: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கிழக்கு மண்டல கவுன்சிலின்  (இ.இசட்.சி) 25வது கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்  நடந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் துணை  முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆலோசனை கூட்டம் நடக்கும்…

FIFA WorldCup 2022 Final: மெஸ்ஸியின் அதிரடியில் ஃபிராமூன்றாவது முறையாக சாம்பியனானது அர்ஜெண்டினா! | FIFA WorldCup 2022 Final: argentina France won the FIFA WorldCup 2022

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே!பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.எம்பாப்பேஅர்ஜெண்டினாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை எம்பாப்பே அப்படியே மாற்றினார். 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து போட்டியை சமமாக்கினார். போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.…

FIFA WorldCup 2022 : மெஸ்ஸிக்கு கோல்டன் பால்; எம்பாப்பேக்கு கோல்டன் பூட்!

ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் பால் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ‘கோல்டன் பூட்’ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ‘கோல்டன் பால்’ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு ‘கோல்டன் குளோவ்’ விருதும் வழங்கப்படும். 1930ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளை இதுவரை பல முன்னணி கால்பாந்தாட்ட வீரர்கள் வென்றுள்ளனர். அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு…

சொல்லிட்டாங்க…

முரட்டு ஆட்டம் ஆடும் கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுவது போல. வடகிழக்கில் வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மைக்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. :- பிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் முதல் பிரதமர் மோடிதான், சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தவே பயப்படுகிறார். : – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ரஷ்யா-உக்ரைன் போரில் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்னையில் கண்ணை மூடிக்கொள்கிறார். :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்எல்லையில் இந்திய வீரர்கள் பலர்…