காப்பாற்றிய மழை… கடைசி பந்துவரை பரபரப்பு.. போராடி வென்ற இந்தியா!
ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை…









