Daily Archives: November 13, 2022

குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்…

மசாலாப் பொருள்கள்: உங்களது குளிர்கால உணவுகளில் கடுகு, மிளகு, மேத்தி மற்றும் அஜ்வைன் போன்ற மசாலாப் பொருள்களை நிச்சயம் சேர்க்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் சளி, இருமல், காய்ச்சல், செரிமானம் மற்றும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதோடு இஞ்சி, கிராம்பு , இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் ஜீராவையும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதோடு குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது. நன்றி

Tamil News Live: மழையுடன் தொடங்கும் ஞாயிறு

10 மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Source link

ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக மோதல் குறித்து ஆலோசனை; எடப்பாடி புறக்கணிப்பு

சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை, ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமியும் புறக்கணித்தார். சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற…

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – இரு அணி கேப்டன்களின் ரியாக்சன் | T20 WC | T20 World Cup Final – Reaction of both team captains

மெல்பர்ன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகலில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. போட்டி தொடர்பாக இரு அணி கேப்டன்களும் பேட்டியளித்துள்ளனர். ‘கடுமையான சவாலை எதிர்பார்க்கிறோம்’: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, “வெளிப்படையாக கூறவேண்டு மெனில் பாகிஸ்தான் ஒரு அற்புதமான அணி. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய மிக நீண்ட வரலாறு அவர்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் உலகக்…

ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

சமூகநீதி கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கடந்த 22 வருடங்களாக என்னை சபித்து வருகிறார்கள். அந்த சாபம் என்னை மேலும் பலப்படுத்துகிறது. – பிரதமர் மோடிஒன்றிய அரசு, பிரதமர் மோடியுடன் உள்ள தொடர்பு மாநில வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு. – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்மோடிஜியின் ரோட் ஷோக்கள் கூட்டத்தை ஈர்க்கவில்லை என நான் கேள்விப்பட்டேன். ரோட்…

டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கும் மழை: ஐசிசி கொண்டு வந்த புதுவிதிமுறைகள் என்ன?

மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இறுதி போட்டி குறித்து பல்வேறு விதிமுறைகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது. நன்றி

வெல்லத்தில் இத்தனை வகைகளா..? எதில் நன்மைகள் அதிகம்..?

தென்னை வெல்லமும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். நன்றி

அதிமுக புள்ளிகள் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக 68 பேரிடம் மோசடி – ஒருவர் கைது | Coimbatore Man arrested for cheating in the name of admk cadres

அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய பாமா மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர் மணிகண்டன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தைக் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகியும் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து, மாரிசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆத்மா சிவக்குமார், மணிகண்டன், சத்ய பாமா, அவரின் கணவர் ஜெய் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். Source link

பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. Source link