Daily Archives: October 15, 2022

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்?

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரேட் லீ கடுமையாக விமர்சித்துள்ளார்.16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.இதனால்  முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி…

எச்சரிக்கை… மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்..!

சளி, உடல் நலக் குறைவு மற்றவர்களுக்கு இருந்தாலும் அவைக் காற்றின் மூலம் பரவும். எனவே நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். நன்றி

செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

40 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது. முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை 2023 ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் இதை 35 சதவிகிதமாகவும், 2024, மார்ச் 25ஆம் தேதிக்குள் 40 சதவிகிதமாகவும் அதிகரிக்க செளதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம், செவ்வாய்கிழமை முடிவு செய்தது.இந்த முடிவின் தாக்கம் பல…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே சென்னையில் வாக்கு சேகரித்தார்: தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் பிரமாண்ட வரவேற்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், மல்லிகார்ஜூன கார்கே நேற்று சென்னையில் வாக்கு சேகரித்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் நேரடியாக களம் காண்கின்றனர். கடந்த வாரம் சென்னை வந்த…

Doctor Vikatan: தினமும் ஷாம்பூ குளியல் எடுப்பது சரியா, தவறா? | Doctor vikatan – Is it right or wrong to take a shampoo bath every day

சிலருக்கு மண்டைப்பகுதி அதீதமாக வறண்டு காணப்படும். அதாவது முடியெல்லாம் உடைந்து உதிர்கிற அளவுக்கு வறண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ, விளக்கெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ வைத்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்பூ குளியல் எடுக்கலாம்.இன்னும் சிலருக்கு மண்டைப்பகுதி எண்ணெய்ப்பசையுடன் இருக்கும். அவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவர்களுடைய சருமம் செபேஷியஸ் சுரப்பிகளின் வழியே சீபம் என்ற எண்ணெயைச் சுரந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது தலையில் பிசுபிசுப்பு இருந்துகொண்டே இருக்கும்.…

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை நாளை தொடக்கம் | T20 Cricket World Cup starts tomorrow

சிட்னி: ஆடவருக்கான ஐசிசி-யின் 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.…

பெப்பர் தட்டை, பக்கோடா, துக்கடா, முறுக்கு… தீபாவளி காரங்கள்! I Kara Snacks Recipes For Deepavali

தீபாவளி இனிப்புகளைச் சாப்பிட்டு திகட்டுகையில், நம் வாயும் கையும் தேடுவது கார ஸ்நாக்ஸைதான். ஸ்வீட்ஸ் ஒரு கடி, காரமான தட்டை ஒரு கடி என்று தீபாவளியைக் கொண்டாட இங்கே சில கார வகைகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். ஹேப்பி தீபாவளி!தேவையானவை:அரிசி மாவு – 1 கப்பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்வெண்ணெய் – 1 டீஸ்பூன்காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயத்தூள் – 2 சிட்டிகைஎள் – 2 சிட்டிகைசீீரகம் – 2 சிட்டிகைஎண்ணெய்…

நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் பழங்குடியினர் அல்ல

மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில்…

சொல்லிட்டாங்க…

* நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டைக் குழந்தைக்காக எந்த மருத்துவமனையை அணுகினர் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.* பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கவும், சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திடவும் வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்.* இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழியை போன்று இப்போது பிரதமர் மோடியிடம் அத்தகைய உறுதிமொழியை பெற அண்ணாமலைக்கு துணிவு இருக்கிறதா? தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. * ஒருதலைக் காதல் கொலைகளை…

Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி? | Doctor Vikatan – What is the way to detect cancer

Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்அறிகுறிகளை வைத்துதான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக `கேன்சர் ஸ்கிரீனிங்’ என்று சொல்கிறோம். ஒவ்வோர்…