இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூட்டாக வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்திருக்கும் அறிக்கை ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ்…









