நாவூரும் பேரீச்சை போண்டா ரூ.2… மாற்றி யோசித்த கூடலூர் இளைஞர்! | Gudalur special date palm bonda.
நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி திடலில் சமீபத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தது. திடலுக்கு எதிரில் இருக்கும் சிறிய டீக்கடை ஒன்றில் மழைக்கு ஒதுங்கினோம். சூடான எண்ணெய் பலகாரங்களை ஆவி பறக்க விற்பனை செய்து கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். ‘பேரீச்சை போண்டா கொடுங்க’ என நிறைய பேர் வரிசைகட்டி வாங்கிக் கொண்டிருந்தனர். என்னது, பேரீச்சம் பழத்தில் போண்டாவா?பேரீச்சை போண்டா ஆச்சர்யத்துடன் கடைக்காரரிடம் பேசினோம்… “என் பேர் சபீர். ப்ளஸ்…








