ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
காரைக்குடி: ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என காரைக்குடியில் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்வு என்ற எண்ணமே தவறானது. ஒரே நாடுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டுக்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. அதனை பறிக்கும் முயற்சியில் இறங்க கூடாது. நீட்,…









