Monthly Archives: August, 2022

நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்… தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களாக சாலையில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரீட்டை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.அடிபைப்பை அகற்றாமல் சிமெண்ட் தளம்இங்கே கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அ.தி.மு.கவைச் சேர்ந்த…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு முதல் தான் மாத ஊதியம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில்,…

இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த சிகந்தர் ரசா சதம்; ஷுப்மன் கில் பேட்டிங், கேட்சினால் இந்தியா 3-0 வெற்றி

ஹராரேயில் நடைபெற்ற 3-வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 289/8 என்று ஸ்கோர்  எடுக்க ஜிம்பாப்வே 276 ரன்களுக்கு கடைசி ஓவர் வரை வந்து போராடி தோல்வி கண்டது.ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ரசா 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன் சமீபத்திய 6 ஒருநாள் போட்டிகளில்…

அமித் ஷாவின் காலணிகளை தூக்கிய பாஜக தலைவர் – ‘குஜராத் அடிமைகள்’ என்று விமர்சித்த டிஆர்எஸ்

3 மணி நேரங்களுக்கு முன்னர்தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் உள்ள கோவிலுக்கு சென்று வந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காலணிகளை மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுத்த சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள், அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியினரையும் கடுமையாகச் சாடி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தெலங்கானாவில்…

ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அர்ஜூன மூர்த்தி பேட்டி

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். பாஜவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூன மூர்த்தி. இவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்றார். ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கி அர்ஜூன மூர்த்தி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ…

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது கேம் வீக் பல அதிர்ச்சிகரமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, நியூகாசிள் யுனைடட் அணியுடன் டிரா செய்தது. கடந்த வாரம் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய செல்சீ, இந்த வாரம் படுமோசமாக விளையாடி லீட்ஸ் யுனைடட் அணியிடம் தோல்வியடைந்தது.டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியோ வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கு எதிராக போராடி வெற்றி பெற வேண்டியதாக இருந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் தடுமாறிக்கொண்டிருந்த ஆர்செனல் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை…

aware the side effects of eating chicken daily

பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் சிக்கன் கடைகள், சிக்கன் பகோடா, சிக்கன் பிரியாணி கடைகள் குவிந்துள்ளன. ஸ்டாட்டர்சில் தொடங்கி மெயின் கோர்ஸ் வரை அனைத்துமே சிக்கனிற்குத்தான் முன்னுரிமை. பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும்…

அணியில் காலி இடங்களே குறைவு, அனைவரையும் எப்படி சேர்க்க முடியும்?- அதிருப்தியாளர்களுக்கு கோலி பதில்

இந்திய டி20 உலகக்கோப்பை அணி தேர்வு செய்யும் போது அஸ்வின் வேண்டாம் யஜுவேந்திர செகல்தான் வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி ராகுல் சாகரை ஏன் எடுத்தோம் என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார். Source link

எங்களை அழைக்க தார்மீக உரிமை இல்லை சுய சிந்தனை இல்லாதவர்: ஓபிஎஸ் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி.முனுசாமி எம்எல்ஏ அளித்த பேட்டி:ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களை அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு இருவரும் கையெழுத்திட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பினர். பொதுக்குழுவுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள்…

IND vs ZIM 3rd ODI | சுப்மன் கில் சதம் விளாசல்: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் சதம் விளாசினார். இஷான் கிஷன் அரைசதம் பதிவு செய்தார். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.…

1 16 17 18 19 20 63