ஓபிஎஸ்சுக்கு முதல்வராகும் வெறி பிடித்துள்ளது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு
கொடைக்கானல்: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: நாம் இயக்க தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காகத்தான் நாம் கட்சிக்கு வந்தோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று அவர் செயல்பட முடியாது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான்…








