Daily Archives: August 28, 2022

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது சரியானதா?| doctor vikatan – Is it okay to eat cornflakes for breakfast every day

கார்ன்ஃப்ளேக்ஸை பால், ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்,நட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கார்ன்ஃப்ளேக்ஸில் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’ ( high fructose corn syrup) வடிவில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதாவது அதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமிருப்பதால் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த உணவல்ல. அதென்ன கிளைசெமிக் இண்டெக்ஸ்? ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள்…

“தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்!” – ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் | ops met his supporters in his theni farm house

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.ஓ.பி.எஸ் – பண்ணை வீடுஜெ.நந்தகுமார்அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி…

ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விருதுநகர்: ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையில் பங்கேற்பது தொடர்பான காங். ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கன்னியாகுமரியில் செப்.7ல் நடைபயணம் தொடங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்த நெடும்பயணம் திருப்பு முனையாக அமையும். பாஜ மாநில தலைவராக அண்ணாமலையை இறக்கி பார்த்தார்கள். அவரிடம்…

Virat kohli will back to his form as run machine in asia cup said harbhajan singh

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சர்வதேச தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி, தற்போது போதிய ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி. அதுதான் அவர் அடித்த கடைசி சதமாக அமைந்துள்ளது.தற்போது கேப்டன் பொறுப்பும் இல்லாத நிலையில், பேட்டிங்கில் ஜொலிப்பார்…

மசூர் வடை மசூர் வடை தான்பா! – News18 Tamil

மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கும் நிலையிலேயே வட இந்தியாவின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோடை வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நமது மக்கள் இந்த மழையினால் ஒரு புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். அதே புத்துணர்ச்சியோடு மழையை பார்த்துக் கொண்டே நமக்கு பிடித்த உணவை சுவைத்துக் கொண்டே அந்த மழையை ரசிப்பது ஒரு தனி சுகம்.அந்த வகையில் மசூர் பருப்பு எனும் பருப்பை கொண்டு செய்யப்படும் ஒரு ரெசிபியை தான் நாம்…

IND VS PAK: இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?

ப்ரதீப் மேகசின்பிபிசி ஹிந்திக்காக14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் போது வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது தங்களுக்குள் விளையாடுவது அரிதாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில், அதுவும் ஐசிசி போட்டிகளில், மிகச் சிலவற்றிலேயே நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆகையால் இந்த ஆட்டத்த்ன் த்ரில் வேறு லெவலில் இருக்கும். இது கிரிக்கெட் போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுவது தான் இதற்குக் காரணம்.இரு…

தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இன்று முடிவு: சோனியா, ராகுல், பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி தொட ர்ந்து 2வது முறையாக கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராக வர வேண்டுமென…

Team India: `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம்; உலகக் கோப்பையே லட்சியம்’ – இந்திய அணி செய்யவேண்டியதென்ன | analysis of team india’s recent tour of west indies and zimbabwe

சுழலைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்புமளவிற்கு, இந்தியாவிடம் ஆப்சன்கள் உள்ளன. ஆனால், வேகப் பந்து வீச்சில், அணி முழு பலத்தோடு இல்லை. புதுப்பந்தில் விக்கெட் எடுக்க சற்றே திணறினர். அர்ஷ்தீப் நம்பிக்கை தந்திருக்கிறார் என்றாலும், பெரிய மேடையில், இன்னமும் பலம் வாய்ந்த அணிகளோடு போதும் போது, அவரால், அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கு ஆசியக் கோப்பை தொடரில் ஓரளவு விடை கிடைக்கலாம். ஆவேஷ் கானின் எக்கானமி, பல போட்டிகளில், 10-ஐ தாண்டி, ஆசியக்…

வேப்பிடு, புலுசு, பச்சடி… ஆந்திரா ஸ்பெஷல் விருந்து | வீக் எண்டு ரெசிப்பீஸ்

தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)தேவையானவை:கோவைக்காய் – 200 கிராம்மிளகாய்த்தூள் – 2 மீடியம் ஸ்பூன்மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகைகடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – 100 கிராம்தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)பாலக்காடு சாம்பார் | மீன் மொய்லி | செம்மீன் மசாலா ஃப்ரை – ஓணம் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!செய்முறை:கோவைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களைச் சேர்த்துக் கலக்கி 20 நிமிடங்கள்…

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை – விசாரணை வளையத்தில் பாஜக நிர்வாகி | Panchayat president killed near Kovilpatti

கோவில்பட்டி அருகே ஊராட்சித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.இதில் சம்பவ இடத்தில் பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில்…