மோடி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசம்
புதுடெல்லி: ‘மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ அமைப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் டெல்லி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்கள் எழுப்பினர்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில்…