நிறைவான வாழ்வுக்கு வழிகாட்டும் தற்சார்பு வாழ்வியல்… நேரடி அனுபவத்துக்குத் தயாரா?
செயற்கை சுழலுக்குள் சிக்கித் தவித்த நமக்கு இயற்கை வழியில் தற்சார்பு வாழ்க்கையை வாழ உணர்த்தியது தக்குணூண்டு இருக்கும் கொரோனா வைரஸ். தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து வாழும் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் அது.பாபநாசம்தற்போது வீட்டுத்தோட்டம் பிரபலமாகி வருகிறது. அது தற்சார்பின் ஓர் அடையாளம்.…









