வரவேற்க ஒருவர், வழியனுப்ப ஒருவருக்கு மட்டுமே அனுமதி எடப்பாடி, ஓபிஎஸ்சை தனியாக சந்திக்க மோடி மறுப்பு: பாஜ நிர்வாகிகள் 17 பேருடன் தனியாக ஆலோசனை
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனியாக சந்திக்க, பிரதமர் மோடி மறுத்து விட்டார். அதேநேரத்தில், வரவேற்க ஒரு அணிக்கும், வழியனுப்ப ஒரு அணிக்கும் அனுமதித்த அவர், தமிழக பாஜ நிர்வாகிகள் 17 பேருடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் தற்போது புயல் வீசி வருகிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகின்றனர். இந்தநிலையில், இருவரும் தங்களுக்குத்தான் பாஜ ஆதரவு இருக்கிறது என்று…









