போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை: தமிழக அரசு
57 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி…








