அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்படுவதாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11பேர்…