அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி: வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமனம்
சென்னை: அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜவில் கலை, கலாசார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள நிர்வாகிகள் பலரை நீக்கினார். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்தார். புதியவர்களை நியமிக்க…
