தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி
ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில்,…








