பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜவுக்கு அருகதை இல்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜவுக்கு அருகதை இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊழலை ஒழித்து விட்டதாக பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல் நடந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள். இதில் மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமை குறித்து ஹின்ட்ரைஸ்…









