மும்பை: லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டியதாக ஒருவர் கைது

Share

லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

பட மூலாதாரம், ANI

மும்பையிலிருந்து ஒரு மணிநேரம் பயணிக்கக்கூடிய தொலைவில் அமைந்துள்ள மீரா ரோடு சிட்டியில் நடந்துள்ள ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் அவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்துகொண்டிருந்த அவரது காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணைக் கொலை செய்த பிறகு அவரது சடலத்தை வெட்டி அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.

புதன்கிழமையன்று (ஜூன் 7), அவர்களது குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

56 வயதான மனோஜ் சானேவை மீரா பயந்தர் பகுதியின் போலீசார் கைது செய்துள்ளனர். ஜூன் 7ஆம் தேதியன்று இந்தக் கொலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நயா நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com