சிரியா போர்: தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – என்ன நடக்கிறது?

Share

தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

தெற்கு சிரியாவின் தெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குதான் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினர் பின்வாங்க வேண்டுமென்று அவர்களுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கிளர்ச்சிக் குழுவினரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், கிளர்ச்சியாளர்களுக்கு 100 கி.மீ தொலைவில் இருக்கும் டமாஸ்கஸ் வரையிலும் பாதுகாப்பான பாதை வழங்கப்பட வேண்டும் என்பதும் அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதி என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் செய்திகளை பிபிசியால் சுயதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com