ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருணின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பிசிசிஐ விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்திருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருணின் பெயரையும் பிசிசிஐ சேர்த்துள்ளது. முதல் ஓடிஐ போட்டி நாக்பூரில் நடக்கவிருக்கிறது.

இப்போது வருண் சக்கரவர்த்தி நாக்பூரில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருண் சக்கரவர்த்தியின் பெயர் சேர்க்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.