uttarpradesh dowry case: வரதட்சணை கொடுமை: “அம்மா மீது தீ வைத்தனர்” – குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

Share

காப்பாற்ற முயன்றேன் முடியவில்லை

சம்பவ இடத்தில் இருந்தும் தனது சகோதரியைக் காப்பாற்ற முடியாமல் இருந்த கஞ்சன் இது குறித்து கூறுகையில், ”என்னையும், எனது சகோதரியையும் துன்புறுத்தினார்கள். எங்களது வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் வாங்கி வரச்சொன்னார்கள்.

என்னை அதிகாலை 1.30 மணியில் இருந்து 4 மணி வரை அடித்தார்கள். ஒருவருக்குத்தான் வரதட்சணை வந்திருக்கிறது. மற்றொருவருக்கு வரதட்சணை எங்கே என்று எங்களிடம் கேட்டார்கள். நீ செத்துவிடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

நிக்கியின் தந்தை

நிக்கியின் தந்தை

எனது சகோதரியைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனது சகோதரிக்கு நடந்த அதே கொடுமை எனக்கும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று அழுதுகொண்டே சென்றார்.

கஞ்சன் கொடுத்த புகாரின் பேரில் நிக்கியின் கணவர் விபின், மைத்துனர் ரோஹித், நிக்கியின் மாமியார் தயா மற்றும் மாமனார் சத்வீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிக்கியின் கணவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெர்சிடீஸ் கார் கேட்டார்கள்

மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நிக்கியின் கொலைக்குக் காரணமானர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நிக்கியின் தந்தை பிகாரி சிங் கூறுகையில், ”அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தோம். முதலில் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் கேட்டாரகள். அதை வாங்கி கொடுத்தோம். அதன் பிறகு புல்லட் கேட்டார்கள்.

அதனையும் வாங்கி கொடுத்தோம். அப்படி இருந்தும் எனது மகளை அடித்து துன்புறுத்தினர். எனது மகளின் சாவுக்குக் காரணமானவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யவேண்டும். அவர்களது வீட்டை இடிக்கவேண்டும்” என்று கோபத்துடன் கூறினார்.

நிக்கியின் தந்தை சமீபத்தில் மெர்சிடீஸ் கார் வாங்கினார். அதேபோன்ற ஒரு கார் வாங்கித்தரவேண்டும் என்று கோரி நிக்கியை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி தீவைத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com