செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, “தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், “என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.
அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.
எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார். அதைத்தாண்டி அவரிடம் எந்த உற்சாகமும் இல்லை.
ஆனால், டெஸ்ட் போட்டியில் 30 அல்லது 40 அல்லது 50 ரன்கள் அடித்தால் விரிவாகப் பேசுவார். அப்படித்தான் கிரிக்கெட்டை அவர் நேசித்தார்.
முதலில் நீங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட வேண்டும். பிறகு 19 வயத்துக்குட்பட்டோர் போட்டி, ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி டிராபி, இந்தியா ஏ அணியில் விளையாட வேண்டும். இவையனைத்தையும் நான் செய்திருக்கிறேன்.
இதன் மூலம், நான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன். என்னுடைய இந்தப் பயணத்தை அவர் பார்த்திருக்கிறார்.
சிவப்பு பந்தில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார். அதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய ஊக்கப்படுத்துவார்
ஆனால், அதிலிருந்து நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.
அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தார். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். அவர் இல்லாமல் இது ஒருபோதும் சாத்தியமில்லை.” என்று கூறினார்.