2006-இல் முதன்முதலாக கிளார்க்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2023-இல் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போது 27 தையல்கள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தோல் புற்றுநோய்
தோல் புற்றுநோய் என்பது, அசாதாரணமாக வளரும் தோல் செல்களால் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய். சூரிய கதிர்களில் உள்ள அல்ட்ரா வைலட் (UV) கதிர்கள் அல்லது டேனிங் படுக்கைகள் (tanning beds ) இதற்குக் காரணமாக அமைகின்றன.
உலகளவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாகக் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. அதிக UV கதிர்வீச்சு, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள புவியியல் அமைவு, மேலும் வெளிர் நிறத் தோலுடைய மக்கள் பெரும்பான்மையாக இருப்பது ஆகியவைக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
சராசரியாக மூன்று ஆஸ்திரேலியர்களில் இருவர், 70 வயதிற்குள் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.