ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடல்லாமல், கேப்டன்சியில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறார்.
கடந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை உட்பட உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகள் அனைத்தையும் வென்றார்.
நடப்பு ஐ.பி.எல் சீசனில் 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் அணியை பிளேஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இதன்மூலம், ஐபிஎல் சீசனில் 3 அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

ஆனால், இத்தகைய கேப்டனை, கடந்த சீசனில் கோப்பை வென்று கொடுத்த கையோடு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது கொல்கத்தா. இச்செயலை அப்போதே பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், கொல்கத்தா அணியில் ஸ்ரேயஸ் முதுகில் குத்தப்பட்டார் என்று வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.