ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர் ஃபார்மட்) வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இத்தொடருக்கான இந்திய அணிப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்கள் முன்னிலையில், 15 வீரர்களை பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்தார். இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடனிருந்தார்.

15 பேர் கொண்ட அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
பேக்-அப் வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா