கொள்கையாக கருத்தாக என் தம்பி விஜய்க்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால், அன்பு பாசத்தில் குறைவில்லை. எப்போதுமே அவர் என் அன்புக்குரிய தம்பி. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வல்லுறவில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
என்னை விட என் மனைவி மன உறுதியாக இருக்கிறார். நான் முகம் சுளிக்கும் வகையில் பேசுகிறேனா?ஒரு நடிகை தெரு தெருவாக என்னை கேவலப்படுத்திய போது யாராவது கேட்டீர்களா?என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே.
என் மூத்த மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு இதெல்லாம் புரிகிறது. அவனுடைய நண்பர்கள் எப்படி பேசுவார்கள்?விரும்பி உறவு வைத்துக் கொண்டு வேண்டாமென்று பிரிந்த பிறகு இப்போதென்ன? இந்த விஷயத்தில் பேச திமுகவில் இருக்கும் ஒரு தலைவனுக்காவது தகுதி இருக்கிறதா?’ என்றார். மேலும் பேசியவர், “மாண்புமிகு தமிழக முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்றார்.
கிட்டத்தட்ட ஒன்றைரை மணி நேரத்துக்கு சீமானிடம் விசாரணை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விசாரணையை முடித்து செல்கையில் கூடியிருந்த தொண்டர்கள் சீமானை வரவேற்று ஆரவாரமிட்டனர்.