தனியார் ஊடகத்திடம் பேசிய ராஜீவ் சுக்லா, “எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். ரோஹித் மற்றும் கோலி இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஆனால், ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது.
எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு கூறக்கூடாது என்பது பிசிசிஐ-யின் கொள்கை.
அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம்.
அதேசமயம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டியில் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆகஸ்டில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், வங்கதேசத்தில் தற்போது அரசியல் பதட்டம் காரணமாக இந்தத் தொடர் கிட்டத்தட்ட நடக்க வாய்ப்பில்லை.
அடுத்து, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் கோலியின் ஆட்டம் இப்போதைக்கு இல்லை.
எனவே, அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் இவ்விருவரையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது.