Promotion and Regulation of Online Gaming Bill, 2025; Anbumani; ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு.

Share

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவான, ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அன்புமணி, “பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பா.ம.க போராடி வருகிறது.

அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com