இந்தியாவுக்கான சவால்:
இந்திய ஸ்பின்னர்கள் பேட்டர்களுக்கு இடம் கொடுக்காமல் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக டைட்டாக வீசிக் கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் பேட்டர்கள் ரொம்பவே திணறினர். சல்மான் ஆகாவையும் ஷாகின் ஷா அப்ரிடியையும் அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் வீழ்த்திக் கொடுத்தார். தயாப் தாஹீரை ஜடேஜா போல்ட் ஆக்கினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது. ஆயினும், கடைசியில் குஷ்தில் ஷா அதிரடியாக ஆடினார். இன்னிங்ஸின் முதல் சிக்சரையும் அவர்தான் அடித்திருந்தார். ஷமியின் 49 வது ஓவரிலும் பெரிய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணாவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கி முயன்று 38 ரன்களில் அவுட்டும் ஆனார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சராசரியான டார்கெட்டாக தெரிந்தாலும் துபாய் மைதானத்தில் இந்த ஸ்கோரை சௌகரியமாக எடுப்பது கொஞ்சம் கடினம்தான். இந்தியாவுக்கு சவால் காத்திருக்கிறது.