OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை கிடைக்காதா? – புதிய விதி கூறுவது என்ன?

Share

OYO Rooms, அறைகள்

பட மூலாதாரம், OYO

  • எழுதியவர், கோட்டேரு ஸ்ராவனி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஹோட்டல் ரூம்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கும் நிறுவனமான ஓயோ (OYO), தனது கூட்டாளி ஹோட்டல்களுக்கு புதிய செக்-இன் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கொள்கையின்படி, ஓயோ அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் ஜோடிகள், முன்பதிவு செய்யும் போதும், அறையில் வந்து தங்கும்போதும் (Check-in.) தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும் வகையில் உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும். இது தற்போது உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

திருமணமாகாத ஜோடிகளை தங்கள் விடுதியில் தங்க அனுமதிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய ஓயோ அதன் கூட்டாளி ஹோட்டல்களுக்கு விட்டு விட்டது. அதாவது திருமணமாகாத ஜோடிகளின் தங்கும் அறைகள் முன்பதிவு குறித்து அந்தந்த விடுதிகள் இனி முடிவு செய்யும்.

மீரட்டில் கிடைக்கும் எதிர்வினையை பொறுத்து மற்ற நகரங்களிலும் இந்த கொள்கைகளை விரிவுபடுத்தப்படலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com