அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணத்திற்கு வீட்டுக்கு வீடு கடிதம் கொடுத்து அழைப்பு விடுக்கும் பணியை திருமங்கலம் தொகுதியில் தொடங்கியுள்ளார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தைக் கடந்த ஜூலை மாதம் கோவையில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட எழுச்சிப் பயணம் மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள மக்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் கிராமம் கிராமமாக வீடு, வீடாகச் சென்று கடிதம் கொடுத்து அழைக்க உள்ளோம்.