அந்த டெல்லி போட்டியிலிருந்து கரண் சர்மா, ட்ரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ், ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். வில் ஜாக்ஸ் மட்டும்தான் 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். மும்பை அணியின் சிறந்த பேட்டர் சூர்யகுமார்தான். ஆனால், அவரே 13 வது போட்டியில்தான் முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தளவுக்கு மும்பை அணியின் எல்லா வீரர்களும் வெற்றியில் பங்களிப்பு செய்து வந்தனர்.
அந்த டெல்லி போட்டிக்குப் பிறகு தொடர்ச்சியாக எல்லாமே வெற்றிதான். இடையில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டதால் நெருங்கி வந்து தோற்றிருந்தனர்.
சீசனை மோசமாகத் தொடங்குவதும், அதன்பிறகு கம்பேக் கொடுப்பதும் மும்பைக்கு ஒன்றும் புதிதல்ல. ‘Deliver when it’s matters’ என்பார்கள். மும்பை அணியினர் அதில் கைதேர்ந்தவர்கள். ப்ளே ஆப்ஸில் இருக்கும் மற்ற 3 அணிகள்தான் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
MI – யின் வெற்றிக்குக் காரணமாக நீங்கள் நினைக்கும் விஷயத்தைக் கமென்ட்டில் சொல்லவும்.