miss worl 2025; Opal Suchata Chuangsri; thailand; 72-வது உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி வெற்றிபெற்றிருக்கிறார்.

Share

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார்.

Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி

2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி

2016-ல் உலக அழகி பட்டம் வென்ற ஸ்டெஃபனி டெல் வாலே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நடுவர் குழுவில் நடிகர் சோனு சூட், 2025-ம் ஆண்டுக்கான அழகுக்கான உலகளாவிய தூதர் சுதா ரெட்டி, 2014-ல் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மருத்துவருமான டாக்டர் கரினா டர்ரெல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நடுவர் குழுவுக்கு ஜூலியா மோர்லி தலைமை தாங்கினார். மேலும், அழகிப் பட்டம் வெல்பவருக்கு கிரீடம் சூட்டுவதற்காக கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com