கோயம்புத்தூரைச் சேர்ந்த மாயா 2009 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது 8 வயதிலேயே ரேக்கட்டை கையில் எடுத்துவிட்டார். முறையான பயிற்சி மூலம் சிறு வயதிலேயே வேகமாக முன்னேற ஆரம்பித்தார். சானியா மிர்சாதான் மாயாவின் இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே சாதிக்கவேண்டும். கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என்பதுதான் மாயாவின் எண்ணம். தொழில் முறையாக டென்னிஸ் ஆட ஆரம்பித்த தொடக்கத்திலேயே அதற்கான அறிகுறியைக் காட்டத் தொடங்கிவிட்டார் மாயா.
கடந்த மாதம் ITF J300 என்ற ஒரு தொடர் நடந்திருந்தது. அந்தத் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு ஏக்தரினா என்கிற வீராங்கனையை வீழ்த்தி சாம்பியனாகியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த செட்டில் முதல் செட்டை மாயா இழந்திருப்பார். அப்படியிருந்தும் போராடி மீண்டு வந்து கம்பேக் கொடுத்து அடுத்த இரண்டு செட்களையும் வென்றிருந்தார்.