திக்வேஷ் vs அபிஷேக்
18 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்தார். ரவி பிஷ்னோயின் ஓவரில் மட்டுமே தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்தார். அதற்கடுத்த ஓவரையே திக்வேஷ் சிங் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக்கின் விக்கெட்டை திக்வேஷ் வீழ்த்தினார். அபிஷேக் 20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

அவுட் ஆகிவிட்டு அவர் வெளியேறுகையில் திக்வேஷ் அவர் பாணியிலேயே ஆக்ரோஷமாகக் கொண்டாடியதோடு அபிஷேக்கை நோக்கி சில வார்த்தைகளையும் பேசினார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டாகியது. இரு அணியின் வீரர்களும் நடுவர்களும் இடையே புகுந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர்.
போட்டிக்குப் பிறகு இருவருக்குமே ஐ.பி.எல் நிர்வாகத்தின் சார்பில் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
திக்வேஷ் செய்கிற அந்த செலிபிரேஷன் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.