அந்த வீடியோவில் இந்திய வீரர் விராட் கோலி, “உங்களின் வாழ்நாளுக்குப் பிறகு உங்களின் உறுப்புகள் பிறரின் வாழ்க்கைக்கு உதவும். இப்போதே, உடல் உறுப்பு நன்கொடையாளராகப் பதிவு செய்து, புதிய வாழ்வை உருவாக்குங்கள்” என்று கூறினார். மேலும், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்களும் அந்த வீடியோவில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இவர்களோடு, ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, “களத்துக்கு அப்பால் ஊக்கம், ஒற்றுமை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது விளையாட்டு. எனவே, இந்த முயற்சியின் மூலம், எல்லாவற்றிலும் சிறந்த பரிசான வாழ்க்கைப் பரிசை வழங்க ஓரடி எடுத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு உறுதிமொழி, ஒரு முடிவு, பலரின் வாழ்வைக் காப்பாற்றும். ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.