இந்திய அணியும் பிளெயிங் லெவனும்..!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணிதான் சாம்பியன்ஸ் டிராபியிலும் ஆடப்போகிறது. ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிவருகிறது. இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபியில் பிளெயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள், எந்த இடத்தில் இறக்கப்படுவார்கள் என்பது குழப்பும் வகையிலேயே இருக்கிறது.
காரணம், முதல் ஒருநாள் போட்டியில் ஓப்பனிங்கில் ஜெஸ்வால், ரோஹித் ஆகியோர் களமிறங்க, ஒன் டவுனில் கில், 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ், ஐந்தாவது இடத்தில் அக்சர் படேல், ஆறாவது இடத்தில் கே.எல்.ராகுல், ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, எட்டாவது இடத்தில் ஜடேஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
இரண்டாவது போட்டியில், விராட் கோலி பிளெயிங் லெவனில் இடம்பிடிக்கவே, ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டு ஓப்பனிங்கில் ரோஹித், கில் களமிறங்க, ஒன் டவுனில் கோலி களமிறக்கப்பட்டார். மிடில் ஆர்டரில் முதல் போட்டியைப்போலே ஸ்ரேயாஸ், அக்சர் படேல், ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் வரிசையாக இறக்கப்பட்டனர்.